அரசுமுறைப் பயணமாக பூட்டான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு
Aug 17 2019 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2 நாள் அரசுமுறைப் பயணமாக பூட்டான் சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நட்பு நாடாக விளங்கும் பூட்டானுக்கு செல்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்த மோடி, இரு நாடுகள் இடையிலான நட்பு ஆழமானது எனக் கூறியுள்ளார். தமது பயணம் மூலம் நட்பும், இருநாடுகளின் எதிர்காலமும் மேலும் வளம்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பூட்டான் மன்னர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும், இந்தப் பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் பூட்டான் பயணத்தில், இந்தியா பூட்டான் இடையே ராணுவம், பாதுகாப்பு, நீர் மின்னுற்பத்தி, மின்சார கொள்முதல், வர்த்தகம், கலாச்சாரம், பொருளாதாரம் ஆகிய துறை சார்ந்த ஒப்பந்தங்களும், பூட்டான் கல்வித்துறை சார்பில், டெல்லி, மும்பை, கான்பூர் ஐ.ஐ.டிக்களுடனும், சில்சார் என்.ஐ.ஐ.டி.யுடனும் 4 தனித்தனி ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.