வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
Jul 24 2019 1:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அடுத்த மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய வரும் 31-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு, அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வருமான வரித்துறை எச்சரித்திருந்தது. இந்நிலையில், வரிசெலுத்துவோரின் கோரிக்கைகளை ஏற்று, அடுத்த மாதம் 31-ம் தேதி வரை, வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.