சட்டவிரோத மணல் குவாரிகளை தடுக்கக்‍ கோரி தொடரப்பட்ட வழக்கு - மத்திய அரசுக்‍கும், தமிழகம் உள்ளிட்ட 6 மாநில அரசுகளுக்‍கும் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு

Jul 24 2019 2:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

சட்டவிரோத மணல் குவாரிகளை தடுக்கக்‍ கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்‍கும், தமிழகம் உள்ளிட்ட 6 மாநில அரசுகளுக்‍கும் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மணல் குவாரிகள் செயல்படுவதாக அழகர்சாமி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முறைகேடாக செயல்படும் மணல் குவாரிகளை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கோரியிருந்தார். ஆறு மற்றும் கடல் படுகைகளில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆறு மற்றும் கடல் படுகைகளில் இருந்து ஒரு கோடி மெட்ரிக் டன் மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு இன்று விசாரித்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில அரசுகளும், சிபிஐ-யும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00