கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை சதி செய்து கவிழ்த்து, பாரதிய ஜனதா ஜனநாயகப் படுகொலை செய்துள்ளது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
Jul 24 2019 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் ஜனநாயகம் தோல்வியடைந்துள்ளதாகவும், மோடியின் சர்வாதிகாரம் வெற்றி பெற்றுள்ளதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ் அழகிரி குற்றம் சாட்டினார்.
சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அவர், கர்நாடகாவில் விரைவில் ஜனநாயகம் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை சதி செய்து கவிழ்த்து, பாரதிய ஜனதா ஜனநாயக படுகொலை செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.