ஏரியின் சேற்றில் சிக்கி தாய் பசு உயிரிழப்பு : தாய் பசுவை விட்டு பிரிய மனமில்லாமல் காத்திருக்கும் கன்று
Jul 23 2019 3:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில், இறந்த தாய் பசுவை விட்டுப்பிரிய மனமில்லாத கன்றுக்குட்டி, அதன் உடலை 2 நாட்களாக சுற்றிவரும் காட்சி காண்போரை நெகிழச் செய்துள்ளது.
புதுச்சேரியில் வறண்டு கிடக்கும் ஊசுட்டேரிக்கு மேய்ச்சலுக்காக கன்றுடன் வந்த தாய்ப்பசு சேற்றில் சிக்கி உயிரிழந்தது. இதனால் செய்வதறியாது நின்ற பசுவின் கன்றுக்குட்டி, அங்கிருந்து வராமல், அமர்ந்திருப்பது காண்போரை நெகிழச்செய்தது.