மும்பை எம்.டி.என்.எல் தொலைத் தொடர்பு அலுவலகத்தில் தீ விபத்து - கட்டடத்தின் மாடியில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தஞ்சம்
Jul 22 2019 6:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பையில் உள்ள எம்.டி.என்.எல் தொலைத் தொடர்பு அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 100 ஊழியர்கள், அலுவலக கட்டடத்தின் மாடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள எம்.டி.என்.எல் தொலைத் தொடர்பு அலுவலகத்தில் மாபெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4ம் நிலை விபத்தாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தீ விபத்தை அடுத்து, 4 தீ அணைப்பு வாகனங்களில், 14 தீ அணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீயிலிருந்து தப்பிக்க, அந்த கட்டடத்தில் இருந்த சுமார் 100 ஊழியர்கள், மாடியில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.