புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திரயான் 2 - குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து
Jul 23 2019 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், பூமியின் வட்டப்பாதையை 16 நிமிடங்களில் சென்றடைந்தது. இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், பிரதமர் திரு. நரேந்திரமோடி உள்ளிட்டோர், சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு, விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் திரு. மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஒவ்வொரு இந்தியனும் மிகுந்த பெருமை கொள்ள வேண்டிய நேரம் என்றும், வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய சிறப்பு தருணம் என்றும், நம் விஞ்ஞானிகளின் வலிமை பறைசாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குடியரசுத்துணைத் தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், விஞ்ஞானிகளின் சாதனை, நாட்டின் புகழை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.