கர்நாடகாவில், அரசுக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏக்களை இழுக்க, 30 கோடி ரூபாய் பேரம் பேசியதாக எடியூரப்பா மீது புகார் - குதிரை பேரம் தொடர்பான ஆடியோ ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் பரபரப்பு தகவல்
Jul 23 2019 10:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில், ஆளும் அரசுக்கு ஆதரவளித்துவரும் எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க, பா.ஜ.க. மாநில தலைவர் திரு.எடியூரப்பா குதிரை பேரத்தில் ஈடுபடும் ஆடியோ ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பதவி விலகல் முடிவால் எழுந்துள்ள சிக்கலை முடிவுக்கு கொண்டுவந்து, ஆட்சியை தக்கவைக்க, ஆளும் கூட்டணி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் இதனைப் பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றுவதில் பா.ஜ.க.-வும் தீவிரம் காட்டி வருகிறது. இதனையொட்டி, பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவர் திரு. தினேஷ் குண்டுராவ், ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க, பாரதிய ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். எம்.எல்.ஏக்களுக்கு தலா 30 கோடி ரூபாய் விலை பேசப்பட்டதாக கூறினார். பா.ஜ.க. தலைவர்கள் திரு. எடியூரப்பா, திரு. முரளிதர ராவ் இடையே நடைபெற்ற குதிரை பேர உரையாடல் ஆதாரம், தங்களிடம் இருப்பதாக தெரிவித்தார். இப்பிரச்னையை, கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எழுப்பும் என்றும் அவர் கூறினார்