கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரும் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம் - அவசர வழக்காக ஏற்க நீதிபதிகள் மறுப்பு
Jul 22 2019 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடுமாறு, சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இருவர் தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் மீது கடந்த வியாழக்கிழமை முதல் விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றும் விவாதம் நடைபெறவுள்ள நிலையில், மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடுமாறு, சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இருவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதனை அவசர வழக்காக விசாரிக்குமாறு மனுவில் குறிப்பிட்டிருந்தானர். இந்நிலையில், வழக்கை உடனடியாக விசாரிக்க மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, நாளை விசாரணைக்கு ஏற்க பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் முடிவால், கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா என்பது சந்தேகமாகியுள்ளது.