பாபர் மசூதி இடிப்பு வழக்கு : 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் - லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Jul 19 2019 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை 9 மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் திரு.அத்வானி, திரு.முரளி மனோகர் ஜோஷி, செல்வி உமாபாரதி, திரு.கல்யாண் சிங் உள்ளிட்ட 21 பேரையும் ரேபரேலி நீதிமன்றம், 2001-ம் ஆண்டு விடுவித்தது. இந்த தீர்ப்பை அலகாபாத் நீதிமன்றம், கடந்த 2010 ஆம் ஆண்டு உறுதி செய்தது.
இதனை எதிர்த்து, சிபிஐ சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், 2 ஆண்டுக்குள் வழக்கை முடிக்குமாறு லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. வழக்கை சிபிஐ நீதிபதி திரு. எஸ்.கே.யாதவ் விசாரித்து வந்தார். அவர் செப்டம்பர் மாதத்துடன் ஓய்வு பெற உள்ள நிலையில், அதற்குள் விசாரணையை முடிக்க முடியாது என உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதினார். இதனை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிபதி எஸ்.கே.யாதவின் பணிக்காலத்தை 9 மாதத்திற்கு நீட்டித்ததுடன், அதற்குள், வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.