கர்நாடக சட்டப்பேரவையில் மாலை 6 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமி அரசுக்கு ஆளுநர் மீண்டும் கெடு
Jul 19 2019 5:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. குமாரசாமிக்கு, அம்மாநில ஆளுநர் மீண்டும் கெடு விதித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி, பா.ஜ.க.வினர், ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து நேற்று மனு அளித்தனர். இதையடுத்து, இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் அனுப்பினார்.
பெரும்பான்மையை நிரூபிக்க காலக்கெடு நிர்ணயித்த ஆளுநரின் உத்தரவை எதிர்த்து கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க, அம்மாநில ஆளுநர் விதித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், தீர்மானத்தின் மீது விவாதம் முடியாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாது என சபாநாயகர் திரு. ரமேஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. குமாரசாமிக்கு, அம்மாநில ஆளுநர் மீண்டும் கெடு விதித்துள்ளார். கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் திருப்பங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.