நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் ஆளுநர் தலையிடுவதா? - கர்நாடக ஆளுநரின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட முதலமைச்சர் குமாரசாமி திட்டம்

Jul 19 2019 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெரும்பான்மையை நிரூபிக்க காலக்கெடு விதித்த ஆளுநரின் உத்தரவை எதிர்த்து கர்நாடக முதலமைச்சர் திரு. குமாரசாமி உச்சநீதிமன்றத்தில் முறையிட திட்டமிட்டுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்‍கோரி, பா.ஜ.க.வினர், ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து, இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிக்க காலக்கெடு நிர்ணயித்த ஆளுநரின் உத்தரவை எதிர்த்து கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உச்சநீதிமன்றத்தில் முறையிட திட்டமிட்டுள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் மீதும் கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாத நிலையில் அவர் நீதிமன்றத்தை நாடவுள்ளார்.

இதனிடையே, கர்நாடக துணை முதலமைச்சர் திரு. பரமேஸ்வரா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்‍கள் கூட்டமும், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. எடியூரப்பா தலைமையில், பா.ஜ.க. எம்.எல்.ஏக்‍கள கூட்டமும் நடைபெற்று வருகிறது. இதனால் கர்நாடக அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00