உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு - 2 தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியீடு
Jul 19 2019 1:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக தமிழ் உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. 2 தீர்ப்புகள் தமிழில் வெளியாகியுள்ளன.
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் எப்போதும் ஆங்கிலத்திலேயே வெளியிடப்படும். இவற்றை முதல்முறையாக பிராந்திய மொழிகளிலும் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளில் 113 வழக்குகளின் தீர்ப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தீர்ப்புகள் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுவது, வழக்கில் தொடர்புடையவர்கள் தீர்ப்பை தங்கள் மொழியில் புரிந்து கொள்வதற்காக மட்டும்தான் என்றும், வேறு எந்த நோக்கத்துக்கும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீர்ப்புகளை நிறைவேற்றுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் போன்ற அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு தீர்ப்பின் ஆங்கிலப் பதிப்பையே பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.