தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் - வரும் 22-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என அறிவிப்பு
Jul 19 2019 11:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், வரும் 22-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO, சந்திரனை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 என்ற விண்கலத்தை கடந்த 2008-ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது. நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை சந்திரயான்-1 உறுதி செய்தது. அதனைத்தொடர்ந்து, சந்திரனில் அடுத்தகட்ட ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. இந்தியாவின் GSLV Mk-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலத்தை, சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, கடந்த 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இறுதி நேரத்தில் விண்ணில் செலுத்தாமல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலம், வரும் 22-ம் தேதி, பிற்பகல் 2.33 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.