ஆக்ராவில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து - 29 பேர் பலி : படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சை
Jul 8 2019 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து, கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
லக்னோவில் இருந்து 44 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து ஒன்று, டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆக்ரா அருகே யமுனா விரைவுச்சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, 50 அடி உயரத்தில் இருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 29 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநர் உறக்க நிலையில் பேருந்தை இயக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.