170 போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க திட்டம் : ரூ.1.5 லட்சம் கோடிக்கு மத்திய அரசு மதிப்பீடு
Jul 8 2019 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய விமானப்படைக்கு தேவையான 170 போர் விமானங்களை, சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் செலவில், உள்நாட்டிலேயே தயாரிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், விமானப்படைக்கு தேவையான போர் விமானங்களை, உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டம், நீண்டகாலமாக ஆலோசனையில் இருந்துவந்தது. இத்திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
36 ரஃபேல் விமானங்களும், 16 தேஜாஸ் இலகு ரக போர் விமானங்களும், இந்திய விமானப் படைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள போதிலும், அவை எண்ணிக்கையளவில் போதுமானதாக இல்லை என்பதால், உள்நாட்டிலேயே அதிநவீன போர் விமானங்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.