நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - மலிவு விலை வீடுகள் திட்டம் இந்த ஆண்டிலேயே செயல்படுத்தப்படும் என உறுதி
Jul 5 2019 3:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2019-20-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அரசு மேற்கொள்ள வேண்டிய பல்வேறு திட்டங்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்த அறிவிப்புகள் இதில் வெளியிடப்பட்டுள்ளன.
மத்தியில், திரு. நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அவர் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையிலான அமைச்சரவையில், நிதியமைச்சராக திருமதி. நிர்மலா சீதாராமன் பதவி வகித்து வருகிறார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, 2019-20-ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை, ஃபிப்ரவரி மாதம் 1-ம் தேதி, அப்போதைய தற்காலிக நிதியமைச்சர் திரு. பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். தற்போது, நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான சூட்கேசுக்கு பதில் பட்ஜெட் ஆவணங்களை சிவப்பு துணியால் சுற்றப்பட்ட நிலையில் அவர் எடுத்துவந்தார். இதைத் தொடர்ந்து அவர் மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அரசு செயல்படுத்தும் முன்னோடித் திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் பற்றி அவர் தெரிவித்தபோது, அவை உறுப்பினர்கள் பலரும் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.