ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டும் பெண்கள் - 100 பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் போட்டி
Jul 4 2019 6:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராணுவத்தில் உள்ள மகளிர் காவல் பிரிவில், காலியாக இருக்கும் 100 பணியிடங்களுக்கு, சுமார் 2 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அண்மைக்காலமாக ராணுவத்தில் சேர பெண்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. போர் விமானங்களில் பணியாற்ற, அண்மையில்தான் 6 பெண் விமானிகள் பயிற்சி முடித்தனர். 15 லட்சம் ஆண்களைக் கொண்ட ஆயுதப்படையில் பெண்களின் பங்களிப்பும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், ராணுவத்தின் மகளிர் காவல் பிரிவில் பணியாற்ற, சுமார் 100 இடங்களே காலியாக உள்ள நிலையில், அப்பதவிக்கு 2 லட்சம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த மாத இறுதியில், கர்நாடக மாநிலம் பெல்காமில், இதற்கான நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.