ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சிக்கும் எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து - நாட்டை பலவீனப்படுத்த பாரதிய ஜனதா முயற்சிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் குற்றச்சாட்டு
Jun 20 2019 6:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் மூலம் நாட்டை பலவீனப்படுத்த பாரதிய ஜனதா முயற்சிப்பதாகவும், ஆர்.எஸ்.எஸ் கொள்கையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருவதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி குற்றம் சாட்டியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் என்ற முழக்கம் மூலம் பாரதிய ஜனதா தனது கோர முகத்தை காட்ட தொடங்கியிருப்பதாகவும், அக்கட்சி உருவாக்கி வரும் பூதம் அவர்களையே விழுங்கிவிடும் எனவும் குறிப்பிட்டார்.
அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் அடிமைத்தனத்தில் இருந்து மீள முடியாது எனவும் திரு.கே.எஸ். அழகிரி விமர்சித்தார்.