பிரதமர் மோடி தலைமையில், டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் - பகுஜன், தெலுங்கு தேசம் உள்ளிட்ட 8 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
Jun 19 2019 6:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக ஆலோசனை நடத்த, டெல்லியில், பிரதமர் திரு. மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட 8 கட்சிகள் புறக்கணித்தன.
நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநிலங்களின் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருந்தபோதும், இது குறித்து ஆலோசிக்க, இன்று, பிரதமர் திரு. மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில், அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், உள்ளிட்ட 8 எதிர்க்கட்சிகள் பங்கேற்கவில்லை.
ஆனால், இடதுசாரிகளும், பீகார் முதலமைச்சர் திரு. நிதீஷ்குமார், ஒடிசா முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக், ஆந்திர முதலமைச்சர் திரு. ஜெகன்மோகன் ரெட்டி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் திரு. பரூக் அப்துல்லா, திருமதி. மெகபூபா முஃப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.