நாடாளுமன்ற மக்களவைக்கான இறுதி மற்றும் 7-ம் கட்டத் தேர்தலில் 64 சதவீதம் வாக்குப்பதிவு - வரும் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை
May 20 2019 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற மக்களவைக்கான 7-வது மற்றும் இறுதி கட்ட தேர்தலில் 64 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது. வரும் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
நாடாளுமன்ற மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. நேற்று ஏழாவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல், பீகார், ஹிமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில்
59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒருசில இடங்களைத் தவிர தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. பின்னர் தேர்தலில் பதிவான வாக்குகள், சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நேற்றைய இறுதிக் தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, வரும் 23-ம் தேதி நடத்தப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.