கொல்கத்தா பேரணியில் நடைபெற்ற கலவரத்திற்கு முதலமைச்சர் மம்தாபானர்ஜியே காரணம் - பா.ஜ.க. தலைவர் அமித்ஷா குற்றச்சாட்டு

May 15 2019 6:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொல்கத்தாவில் பா.ஜ.க. பேரணியின்போது நடைபெற்ற கலவரத்திற்கு, மேற்குவங்க முதலமைச்சர் மம்தாபானர்ஜியே காரணம் என அக்‍கட்சித் தலைவர் திரு. அமித்ஷா உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொல்கத்தா நகரில் நேற்று நடைபெற்ற பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்ற பேரணியில், பிரசார வாகனத்தின் மீது சில கம்புகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, பேரணியில் வந்தவர்களுக்கும் வேறொரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. சாலையோரத்தில் இருந்த கட் அவுட்டுகள் அடித்து நாசப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றன.

இந்த தாக்குதலின் பின்னணியில் மம்தாபானர்ஜி இருப்பதாக பா.ஜ.க. தலைவர் திரு.அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த 6 கட்ட தேர்தலில் வன்முறை நிகழாத நிலையில், மேற்குவங்கத்தில் மட்டுமே இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பதால் அதற்கு திரிணாமுல் கட்சியே பொறுப்பு என்று தெரிவித்தார்.

இதேபோல், மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிசும் மம்தா மீது குற்றம் சாட்டியுள்ளார். அவருக்‍கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால்தான் கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா பேரணியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00