மம்தா பானர்ஜியை அவமதித்து புகைப்படம் வெளியிட்ட விவகாரம் - பா.ஜ.க பெண் நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்
May 15 2019 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்குவங்க மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை அவமதித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்ட பா.ஜ.க பெண் நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற மெட்காலா நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா, வித்தியாசமான ஆடை, அலங்காரத்துடன் தோன்றினார். அவருடைய தோற்றத்தை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தோற்றத்துடன் ஒப்பிட்டு, பா.ஜ.க. இளைஞரணி நிர்வாகி பிரியங்கா சர்மா சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து, திரிணாமூல் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில், பிரியங்கா ஷர்மா கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து பிரியங்கா சார்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், பிரியங்கா சர்மாவுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.