ரமலான் நோன்பு, கோடை வெப்பம் காரணமாக வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்கு தொடங்கக்கோரிய வழக்கு - அனுமதி வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு
May 14 2019 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெயிலின் தாக்கம் மற்றும் ரம்ஜான் நோன்பு காரணமாக, மக்களவை தேர்தலின் அடுத்த கட்ட வாக்குப்பதிவுகளை காலை 5.30 மணிக்கே தொடங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாடாளுமன்ற மக்களவைக்கான ஆறு கட்ட தேர்தல்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், ஏழாவது கட்ட தேர்தல் மட்டுமே நடைபெற வேண்டி உள்ளது. இதனிடையே, ரம்ஜான் காலம் என்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், தேர்தலை காலை 5.30 மணிக்கே தொடங்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. முகமது நிஸாம் பாஷா என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், முதல்கட்ட விசாரணையின்போது, எஞ்சியுள்ள தேர்தலின் வாக்குப்பதிவை, காலை 5.30 மணிக்கே தொடங்க முடியுமா என தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து பரிசீலனை செய்து உரிய முடிவெடுக்கவும் அறிவுறுத்தினர். இந்நிலையில், காலை 5.30 மணிக்கே வாக்குப்பதிவை தொடங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.