புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்‍கையில் தலையிட துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்‍கு விதிக்‍கப்பட்ட தடையை நீக்‍க முடியாது - உச்சநீதிமன்றம் உத்தரவு

May 10 2019 4:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட, துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்‍கு, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்‍க, உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு, ஆவணங்களைக் கோருவதற்கு துணை நிலை ஆளுநர் திருமதி கிரண் பேடிக்‍கு கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு அதிகாரம் வழங்கியது. இதனை எதிர்த்து, புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், ஆவணங்களைக் கோருவதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்தும், கிரண்பேடிக்கு ஆதரவாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்‍கு இன்று விசாரணைக்‍கு வந்தபோது, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்‍க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால், கிரண்பேடிக்‍கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00