ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரி என பணம்கேட்டு ஏமாற்ற முயன்றவரை காலணியால் புரட்டியெடுத்த பெண் : ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பு
May 8 2019 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரி எனக் கூறி பணம் பறிக்க முயன்ற நபரை, பெண்மணி ஒருவர் பொது இடத்தில் வைத்து சரமாரியாக தாக்கிய சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷத்பூரில், ஊழல் தடுப்பு அதிகாரி என போலியான அடையாள அட்டையை வைத்திருந்த நபர் ஒருவர், பெண்மணி ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று ஏமாற்ற முயன்றுள்ளார். இதனை அறிந்த பெண், பணம் பறிக்க முயன்ற நபரை, பொது இடத்தில் வைத்து, காலணியால் சரமாரியாக அடித்து புரட்டியெடுத்தார். பணம் கேட்டவரை போலீசாரிடம் சிக்கவைக்க, அந்நபரை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்த பெண், ஒருகட்டத்தில், ஆத்திரத்தை அடக்கமுடியாமல் கடுமையாக தாக்கினார். புகாருக்கு ஆளான நபரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.