பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்‍கு - நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

May 10 2019 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் மோடியை திருடன் என்று கூறியதற்காக உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல்காந்தி இன்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

ரஃபேல் ஒப்பந்த ஊழலில் பிரதமர் திரு. மோடியை திருடன் என்று உச்சநீதிமன்ற நீதிபதியே கூறியதாக திரு. ராகுல் காந்தி விமர்சித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த பாரதிய ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணையில், ராகுல்காந்தி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், விளக்‍கம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இருந்தபோதிலும், விளக்‍கம் திருப்தி அளிக்‍கவில்லை என தெரிவித்த உச்சநீதிமன்றம், ராகுலுக்‍கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, தனது நிலைப்பாடு குறித்து ராகுல் பதில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்‍கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்‍கு வந்தபோது, ராகுல்காந்தி சார்பாக, 3 பக்‍கங்கள் கொண்ட பிரமாண பத்திரம் தாக்‍கல் செய்யப்பட்டது. அதில், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக ராகுல் தரப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00