தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுடனான சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேட்டி

May 8 2019 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானா முதலமைச்சர் திரு.சந்திரசேகர ராவுடனான தனது சந்திப்பு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததென கேரள முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா முதலமைச்சர் திரு.சந்திரசேகர ராவ், காங்கிரஸ் - பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியை உருவாக்க கடந்த சில ஆண்டுகளாகவே முயற்சித்து வருகிறார். இதன் ஒரு முயற்சியாக சந்திரசேகர ராவ், கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 3-வது அணியை உருவாக்குவதற்கான சந்திப்பாக பார்க்கப்பட்ட நிலையில், தங்களது சந்திப்பு குறித்த தகவல்களை பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், தேசிய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததாகவும் அவர் கூறினார். சந்திரசேகர ராவின் கணிப்புப்படி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும், தேர்தலுக்கு பின் மத்தியில் ஆட்சி அமைவதில் மாநில கட்சிகளின் பங்கு பிரதானமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். எனினும், பிரதமர் வேட்பாளர் குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும் பினராய் விஜயன் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00