உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோய் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்‍கு - ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையில் விசாரணை குழு அமைப்பு

Apr 25 2019 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.ரஞ்சன் கோகோய் மீதான புகாரை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி திரு.ஏ.கே.பட்நாயக் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்‍கும் திரு.ரஞ்சன் கோகோய்க்‍கு எதிராக அண்மையில் பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். இது நீதிபதியின் மாண்பை களங்கப்படுத்தும் முயற்சி என்றும், இதில் சதித்திட்டம் இருப்பதாகவும் கூறி வழக்‍கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடுத்தார். இதுகுறித்து புலனாய்வுகுழு அமைத்து விசாரிக்‍க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்‍கு நீதிபதி திரு. அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்‍கு வந்தது. வழக்‍கை விசாரித்த நீதிபதிகள், தலைமை நீதிபதி விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என்றும், பணம், அதிகாரம் படைத்தவர்களால் நீதித்துறையை ஒருபோதும் கட்டுப்படுத்திவிட முடியாது என்றும் எச்சரித்தனர். மேலும், கோகோய் மீதான புகார் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழுவை நியமித்து உத்தரவிட்டனர். இதனிடையே, இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் இருந்து நீதிபதி ரமணா விலகியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00