ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட விவகாரம் - தியாகத்தலைவி சின்னம்மா சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல்
Apr 25 2019 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இரட்டை இலை சின்னம் வழக்கில் தியாகத் தலைவி சின்னம்மா சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக டெல்லி தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற வழக்கில், இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தியாகத் தலைவி சின்னம்மா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது சரியே என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு சின்னம் ஒதுக்கிய டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் தியாகத் தலைவி சின்னம்மா சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தது. இந்நிலையில், இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதை மறு சீராய்வு செய்ய வலியுறுத்தி, சின்னம்மா சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.