மேற்குவங்க தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையில் காங்கிரஸ் தொண்டர் பலி
Apr 24 2019 12:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற போது, திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் நாடாளுமன்ற தொகுதிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிக்கு உட்பட்ட பிலிக்ராம் வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் காத்திருந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகாரர்களுக்கும் இடையை தகராறு ஏற்பட்டது. இருபிரிவினரும் ஒருவரை ஒருவர் பயங்கரமான ஆயுதத்தைக் கொண்டு தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லியாரூல் சேக் என்பவர் உயிரிழந்தார்.