குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் தொகுதியில் வாக்களித்தார் பிரதமர் மோடி - பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோரும் வாக்களிப்பு
Apr 23 2019 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களவை மூன்றாம் கட்ட தேர்தல் மற்றும் கோவா, குஜராத்தின் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் திரு. மோடி, பா.ஜ.க. தலைவர் திரு. அமித்ஷா, கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் உள்ளிட்டோர் காலையிலேயே சென்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் தொகுதிக்குட்பட்ட ராணிப் வாக்குச்சாவடியில் பிரதமர் திரு. மோடி வாக்களித்தார். திரு. அமித்ஷாவும் அதே தொகுதிக்கு உட்பட்ட நரன்புரா வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். அகமதாபாத்தின் ரெய்சன் பகுதி வாக்குச்சாவடியில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடி வாக்கப்பதிவு செய்தார். கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் கன்னூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் ஓட்டளித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. சசி தரூர், திருவனந்தபுரத்தில் வாக்களித்தார். ஒடிஷா முதலமைச்சர் திரு. நவீன்பட்நாயக் புவனேஸ்வர் தொகுதியில் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினார். குஜராத் முதலமைச்சர் திரு.விஜய் ரூபானி, ராஜ்காட்டில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.