பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்று இந்திய அரசியலமைப்பையும் அழிக்க முயற்சி - பிரதமர் நரேந்திர மோடி மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு
Mar 18 2019 5:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்ததைப்போல், இந்திய அரசியலமைப்பை பிரதமர் மோடி அழித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் கல்புருகி நகரில், நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது, உரையாற்றி அவர், உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை அதிரடியாக மதிப்பிழக்கச் செய்ததைப்போல், நாட்டின் அரசியலமைப்பையும் பிரதமர் அழித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தள்ளுபடி செய்யப்பட்டதைப்போலவே, நாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திரு. ராகுல்காந்தி உறுதியளித்தார்.