டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது - தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்பு
Mar 14 2019 11:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா தலைமையில், அனைத்து மாநில தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்றுள்ள ஆலோசனை கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இன்று டெல்லியில் நடைபெற்று வரும் கூட்டத்தில், அனைத்து மாநில தேர்தல் பார்வையாளர்களுடன், தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா ஆலோசனை நடத்தி வருகிறார். இக்கூட்டத்தில், தேர்தலை வெளிப்படையாக நடத்துவது, பதற்றமான தொகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது போன்ற முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையர்கள் திரு.சுஷில் சந்திரா, திரு. அசோக் லாவசா ஆகியோர் முக்கிய ஆலோசனைகள் தெரிவிக்கின்றனர்.