தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் : தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு
Mar 12 2019 11:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு.சுனில் அரோரா அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது.
வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசிநாள் மார்ச் 26. வேட்புமனு திரும்பப்பெறும் கடைசி நாள் மார்ச் 29-ம் தேதியாகும். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்தார்.