இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டிடிவி தினகரனை பாட்டியாலா நீதிமன்றம் விசாரிக்க தடை - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி
Mar 8 2019 1:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவிதினகரனிடம் பாட்டியாலா நீதிமன்றம் விசாரிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை டெல்லியிலுள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தன்மீதான விசாரணைக்கு தடை கோரி திரு. டிடிவி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, பாட்டியாலா நீதிமன்றம் திரு. டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த தடை விதித்து உத்தரவிட்டார்.