ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டுவெடிப்பு - பலத்த காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதி
Mar 7 2019 1:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டுவெடித்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்தனர்.
ஜம்மு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தில் குண்டு வெடித்தது. பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்ததை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். இந்த விபத்தில் அந்த பேருந்து சின்னாபின்னமானது. குண்டு வெடித்ததை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் பேருந்தில் இருந்த பயணிகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
சம்பவ இடத்தில் பாதுகாப்புப்படை மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் புல்வாமாவில் பாதுகாப்புபடையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து, ஜம்மு பேருந்துநிலையத்தில் குண்டுவெடித்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.