உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா எம்.பி. -எம்.எல்.ஏ. மோதிக் கொண்ட சம்பவம் : ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி மேலிடம் தகவல்
Mar 7 2019 5:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாரதிய ஜனதா எம்.பி. மற்றும் அக்கட்சி எம்.எல்.ஏ. தாக்கிக்கொண்ட சம்பவத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில பாரதிய ஜனதா தலைவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் சந்த் கபீர் நகரில் திட்டக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா எம்.பி. ஷரத் திரிபாதி, உள்ளூர் சாலை அடிக்கல்லில் தனது பெயர் இல்லை எனக்கூறி ஆத்திரமடைந்து அதுகுறித்து கேட்டபோது, இது தனது முடிவு
என மற்றொரு பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் சிங் பதிலளித்துள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மற்ற உறுப்பினர்கள் மத்தியில் மோதலில் ஈடுபட்டனர். ஷரத் திரிபாதி,
தனது காலணியை கழற்றி எம்.எல்.ஏ.வை தாக்கினார். இதனால் எம்.எல்.ஏ.வும் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று அவரை தாக்கினார்.
இதனையடுத்து அக்கூட்டத்தில் இருந்து இருவரும் வெளியேறினர். இந்த மோதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தரப்பிரதேச பாரதிய ஜனதா தலைவர் திரு.எம்.என். பாண்டே, இருவரையும் லக்னோ வர சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.