ரஃபேல் போர் விமான கொள்முதல் பேரத்தில் ஊழல் நடைபெற்றது உறுதி - புதிய ஆதாரத்தை வெளியிட்டு அம்பலப்படுத்தியது ஆங்கில நாளேடு

Mar 6 2019 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாரதிய ஜனதா அரசு மேற்கொண்ட ரஃபேல் போர் விமான கொள்முதல் பேரத்தில் ஊழல் நடைபெற்றதற்கான புதிய ஆதாரத்தை பிரபல ஆங்கில நாளேடு வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளது.

ஃபிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து, ரஃபேல் போர் விமானங்கள் வாங்க, பிரதமர் திரு.மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பது உறுதி என தொடர்ந்து செய்தி வெளியிட்டுவரும் பிரபல ஆங்கில நாளிதழ், தற்போது, மேலும் சில புதிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

ரஃபேல் கொள்முதலுக்கான வங்கி உத்தரவாதத்தை, ஃபிரான்ஸ் அரசும், டசால்ட் நிறுவனமும் இந்தியாவுக்‍கு வழங்க மறுத்தது உறுதியாகியுள்ளது. மேலும், வங்கி உத்தரவாத தொகையான 45 ஆயிரத்து 74 கோடி ரூபாயை வழங்கவும் ஃபிரான்ஸ் மறுத்ததாக கூறப்பட்டுள்ளது. இதனால் 36 விமானங்களின் விலை காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 19 ஆயிரத்து 60 கோடி ரூபாய் அதிகம் என நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வங்கி வட்டியும் 7 புள்ளி இரண்டு எட்டு சதவீதம் அதிகரித்ததாக அந்த ஆங்கில நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00