சின்னதம்பி யானையை கூண்டிலிருந்து விடுவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு - மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
Mar 1 2019 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சின்னத்தம்பி யானையை கூண்டில் வைத்து பராமரிக்க எதிர்புத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உடுமலை அமராவதி வனப்பகுதியில் இருந்து வெளியேறி நகர்ப்புறங்களில் வலம் வந்த சின்னதம்பி யானையை வனத்துறையினர் பிடித்து வரக்களியாறு முகாமில் கூண்டில் அடைத்தனர். தற்போது சின்னதம்பி யானை கூண்டில் வைத்து பராமரிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து People for Cattle என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. சின்னதம்பியை கூண்டில் வைத்து பராமரிக்க கூடாது என்றும், வனத்தில் விட வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியது.