நாட்டை பலவீனப்படுத்தும் செய்திகளையும், வீடியோ காட்சிகளையும் வெளியிட வேண்டாம் - சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
Mar 1 2019 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டை பலவீனப்படுத்தும் செய்திகளையும், வீடியோ காட்சிகளையும் வெளியிட வேண்டாம் என சமூக ஊடகங்களுக்கு மத்திய சட்ட அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது உள்ள சூழலில் நாட்டை பலவீனப்படுத்தும் செய்திகளை சமூக ஊடகங்கள் வெளியிடக் கூடாது என கேட்டுக் கொண்டார். விமானி அபிநந்தன் தொடர்பாக வீடியோக்களை வெளியிடக் கூடாது என Youtube நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். இந்த உத்தரவினைத் தொடர்ந்து விமானி அபிநந்தன் தாக்கப்பட்டது தொடர்பான 11 வீடியோக்கள் Youtube-லிருந்து நீக்கப்பட்டுள்ளன.