ராஜஸ்தானில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் பயங்கரம் - கட்டுப்பாட்டை இழந்த டிரக் மோதியதில் சம்பவ இடத்திலேயே 13 பேர் பலி

Feb 19 2019 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண ஊர்வலத்திற்குள் கட்டுப்பாட்டை இழந்த டிரக் மோதிய விபத்தில் 13 பேர் பலியாகினர்.

ராஜஸ்தான் மாநிலம், பிரதாப்கர்க் - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், அம்பாவாலி கிராமம் அருகே திருமண ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலம் சாலையோரம் சென்று கொண்டிருந்த போது, டிரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து திருமண ஊர்வலத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் திருமண ஊர்வலத்தில் சென்ற 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும், 15க்கும் ‍மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்ததும் உடனடியாக அங்கு வந்த போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக உதய்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். டிரக் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதலமைச்சர் திரு.அசோக் கெலாட் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00