புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியுடன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த்கெஜ்ரிவால் சந்திப்பு - கிரண்பேடிக்கு எதிரான போராட்டத்திற்கு நேரில் ஆதரவு
Feb 18 2019 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த்கெஜ்ரிவால், புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் திரு.நாராயணசாமி, அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் நிர்வாக தலையீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஒருவார காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஏற்கெனவே பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவாலும் இன்று திரு.நாராயணசாமியை சந்தித்தார். அவரது போராட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். அப்போது பேசிய திரு.அரவிந்த்கெஜ்ரிவால், மத்திய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும், கிரண்பேடியின் நிர்வாக ரீதியிலான தலையீடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.