மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் - ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
Jan 18 2019 11:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், மக்களவைத் தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் பணிகளில் நேரடி தொடர்பு உள்ள அதிகாரி, ஒரு மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்தாலோ, அல்லது சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தாலோ அவர்களை இடமாற்றம் செய்யும் நடைமுறையை தேர்தல் ஆணையம் கடைபிடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்படாமல் இருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.