கடவுள் பெயரில் அரசியல் செய்கிறது பாரதிய ஜனதா கட்சி - காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் கடும் தாக்கு
Jan 16 2019 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவனந்தபுரம் கோயிலில் பிரதமர் திரு.நரேந்திரமோடி வழிபாடு நடத்த சென்றபோது, உள்ளூர் எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்குக் கூட அனுமதி அளிக்கப்படவில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சசிதரூர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பிரதமர் திரு.நரேந்திரமோடி நேற்று ஒருநாள் பயணமாக கேரளா சென்றபோது திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசாமி கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது, அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான திரு.சசிதரூர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் போன்றோருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதுகுறித்து அதிருப்தி தெரிவித்துள்ள திரு.சசிதரூர், தங்களது பெயர்கள் தரிசனம் செய்வோரின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் வழிபடும்போது மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களை அனுமதிக்கூடாது என கூறுவது நியாயம்தானா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கடவுளை வைத்து பா.ஜ.க. தொடர்ந்து அரசியல் செய்வதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.