பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் - இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு
Jan 10 2019 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேறியது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் மக்களவையில் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.
இந்நிலையில், இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 165 உறுப்பினர்களும், எதிராக 7 உறுப்பினர்களும் வாக்களித்தனர். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது, சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என பிரதமர் திரு.நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்த இடஒதுக்கீடு மசோதாவை அரசு அவசர கதியில் கொண்டு வந்துள்ளதாகவும், இந்த மசோதா நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் திரு.டி. ராஜா தெரிவித்தார்.