பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்‍கான மத்திய அரசின் இட ஒதுக்கீடு நடவடிக்‍கை - தேர்தல் ஆதாயத்திற்காகவே பா.ஜ.க. அரசு கொண்டுவந்திருப்பதாக அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு

Jan 9 2019 5:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்களவை தேர்தலில் ஆதாயம் பெறவே இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவி‌த்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் செல்வி மாயாவதி, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, பொதுப் பிரிவில் இட ஒதுக்கீடு தர, மசோதா தாக்கல் செய்ததை வரவேற்பதாகவும், ஆனால், சரியாக திட்டமிடாமல், அவசர கோலத்தில், மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், இது, மக்களவை தேர்தலுக்கான, பா.ஜ.க,வின் அரசியல் நாடகமே என்றும் கருத்து ​தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு,"ரபேல் ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும், மக்களவைத் தேர்தலை கவனத்தில் கொண்டும், 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அளித்துள்ளதாகவும், கடுமையாக விமர்சித்துள்ளார். இருப்பினும், பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்போருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை தெலுங்கு தேசம் கட்சி ஆதரிக்கிறது என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00