நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மேலும் அதிகரிக்‍கும் - அடுத்த 2 ஆண்டுகளில் 7 புள்ளி 5 சதவீதமாக உயரும் என உலக வங்கி கணிப்பு

Jan 9 2019 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

2018-2019 ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனும் ஜிடிபி 7 புள்ளி 3 சதவீதமாக உயரும் எனவும், அடுத்த 2 ஆண்டுகளில் இது 7 புள்ளி 5 சதவீதமாக இருக்‍கும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது.

ஜனவரி மாதத்திற்கான உலக பொருளாதார வளம் தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் தொடர்ந்து பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது என்றும், இந்தியாவின் வளர்ச்சி தற்போது வரை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் 6 புள்ளி 2 சதவீதமாக சரிவடையும் என்றும் 2021-ல் இது 6 சதவீதமாக சரிவடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2017-ல் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. அமல் ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதாரம் சரிவடைந்தது என்றும், 2017-ல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6 புள்ளி 9 சதவீதமாகவும், இந்தியாவின் வளர்ச்சி 6 புள்ளி 7 சதவீதமாகவும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், தற்போது இந்தியாவில் முதலீடுகள் மற்றும் கொள்முதல்கள் அதிகரித்துள்ளதால் பொருளாதார வளர்ச்சி உயரும் என்றும் தெரிவித்துள்ளது. தொழில் வளர்ச்சியில் இந்தியா குறிப்பிடும்படியான இடத்தை எட்டி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00