பிரதமர் நரேந்திரமோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் உரையாடல் - வர்த்தக பாதிப்பு, பாதுகாப்பு பற்றி முக்கிய ஆலோசனை
Jan 8 2019 6:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் திரு.நரேந்திரமோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். வர்த்தகம், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மோடியுடன் டிரம்ப் பேசினார்.
பிரதமர் திரு.நரேந்திரமோடியை நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இருதரப்பு உறவுகள் குறித்து நிலவி வரும் ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் குறித்து அவர்கள் பகிர்ந்துகொண்டனர். மேலும், தீவிரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற விவகாரங்கள் குறித்து பேசிய தலைவர்கள், எதிர்காலத்தில் உறவை மேலும் வலுப்படுத்தவும் உறுதிபூண்டனர்.