தமிழக இடைத்தேர்தல்களில் குக்‍கர் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளிக்‍க வேண்டும் - அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில் வாதம்

Jan 7 2019 6:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் குக்‍கர் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்‍குமாறு கழக துணைப் பொதுச் செலயாளர் திரு.டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்‍கில் வாதம் முன்வைக்‍கப்பட்டது.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் தேர்தலில் போட்டியிட குக்‍கர் சின்னத்தை ஒதுக்‍க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து எடப்பாடி தரப்பினர் தொடர்ந்த வழக்‍கு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதி திரு.ஏ.எம். கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்‍கு வந்தது. அத்துடன் திருவாரூர் உள்ளிட்ட தேர்தல்களில் குக்‍கர் சின்னம் ஒதுக்‍க கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் சார்பில் தாக்‍கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்‍கு எடுத்துக்‍கொள்ளப்பட்டது. அப்போது கழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்‍கறிஞர் திரு.கபில்சிபல், தமிழகத்தில் காலியாக உள்ள ​தொகுதிகளில் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்‍கப்படும் சூழல் உள்ளதால், அந்த தொகுதிகளில் போட்டியிட குக்‍கர் சின்னத்தை ஒதுக்‍குமாறு கழக துணைப்பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் சார்பாக வாதம் வைக்‍கப்பட்டது. வாதத்தை கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக வரும் 17ம் தேதி விரிவான விசாரணைக்‍கு உத்தரவிடப்படும் என தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00